முகப்பு |
தொடி பழி மறைத்தலின் |
23. குறிஞ்சி |
தொடி பழி மறைத்தலின், தோள்உய்ந்தனவே; |
||
வடிக் கொள் கூழை, ஆயமோடு ஆடலின், |
||
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே; கடிக் கொள |
||
அன்னை காக்கும் தொல் நலம் சிதைய, |
||
5 |
காண்தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர் |
|
முத்துப் படு பரப்பின் கொற்கை முன்துறைச் |
||
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல் |
||
தெண் நீர் மலரின் தொலைந்த |
||
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே! | உரை | |
தலைவி துயர் ஆற்றாமை உணர்ந்த தோழி வரைவு கடாயது.-கணக்காயனார்
|