முகப்பு |
தொன்று படு |
247. குறிஞ்சி |
தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக் |
||
கொன்ற யானைச் செங் கோடு கழாஅ, |
||
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி, |
||
எஃகுறு பஞ்சிற்று ஆகி, வைகறைக் |
||
5 |
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட! நீ |
|
நல்காய்ஆயினும், நயன் இல செய்யினும், |
||
நின் வழிப்படூஉம் என் தோழி நல் நுதல் |
||
விருந்து இறைகூடிய பசலைக்கு |
||
மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை சென்மே! | உரை | |
'நீட்டியாமை வரை' எனத் தோழி சொல்லியது.-பரணர்
|