முகப்பு |
தோலாக் காதலர் |
339. குறிஞ்சி |
'தோலாக் காதலர் துறந்து நம் அருளார்; |
||
அலர்வது அன்றுகொல் இது?' என்று, நன்றும் |
||
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி, |
||
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் |
||
5 |
அறிந்தனள்போலும், அன்னை-சிறந்த |
|
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி, |
||
நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல் |
||
ஒள் நுதல் பெதும்பை நல் நலம் பெறீஇ, |
||
மின் நேர் ஓதி இவளொடு, நாளை, |
||
10 |
பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித் |
|
தெண் நீர் மணிச் சுனை ஆடின், |
||
என்னோ மகளிர்தம் பண்பு என்றோளே? | உரை | |
சிறைப்புறமாகத் தலைவன் கேட்பச் சொல்லியது.-சீத்தலைச் சாத்தனார்
|