முகப்பு |
தோளும் அழியும் |
397. பாலை |
தோளும் அழியும், நாளும் சென்றென; |
||
நீள் இடை அத்தம் நோக்கி, வாள் அற்றுக் |
||
கண்ணும் காட்சி தௌவின; என் நீத்து |
||
அறிவும் மயங்கி, பிறிது ஆகின்றே; |
||
5 |
நோயும் பெருகும்; மாலையும் வந்தன்று; |
|
யாங்கு ஆகுவென்கொல் யானே? ஈங்கோ |
||
சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், 'சாவின் |
||
பிறப்புப் பிறிது ஆகுவதுஆயின், |
||
மறக்குவேன்கொல், என் காதலன்' எனவே. | உரை | |
பிரிவிடை ஆற்றாளாகி நின்ற தலைமகளை வற்புறாநின்ற தோழிக்கு 'ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது.-அம்மூவனார்
|