முகப்பு |
தோளே தொடி கொட்பு ஆனா |
133. குறிஞ்சி |
'தோளே தொடி கொட்பு ஆனா; கண்ணே |
||
வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே; |
||
நுதலும் பசலை பாயின்று-திதலைச் |
||
சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல் |
||
5 |
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு' என்று, |
|
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற, |
||
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்- |
||
காமுறு தோழி!-காதல்அம் கிளவி, |
||
இரும்பு செய் கொல்லன் வெவ் உலைத் தெளித்த |
||
10 |
தோய் மடற் சில் நீர் போல, |
|
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே. | உரை | |
வரைவிடை வைத்துப்பிரிவு ஆற்றாளாய தலைவி வற்புறுத்தும் தோழிக்குச்சொல்லியது.-நற்றமனார்
|