முகப்பு |
தோளே தொடி நெகிழ்ந்தனவே |
197. பாலை |
'தோளே தொடி நெகிழ்ந்தனவே; நுதலே |
||
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே; |
||
கண்ணும் தண் பனி வைகின; அன்னோ! |
||
தெளிந்தனம் மன்ற; தேயர் என் உயிர்' என, |
||
5 |
ஆழல், வாழி-தோழி!-நீ; நின் |
|
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு, |
||
வண்டு படு புது மலர் உண்துறைத் தரீஇய, |
||
பெரு மட மகளிர் முன்கைச் சிறு கோல் |
||
பொலந் தொடி போல மின்னி, கணங் கொள் |
||
10 |
இன் இசை முரசின் இரங்கி, மன்னர் |
|
எயில் ஊர் பல் தோல் போலச் |
||
செல் மழை தவழும், அவர் நல் மலை நாட்டே. | உரை | |
வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.-நக்கீரர்
|