முகப்பு |
நகுகம் வாராய் |
250. மருதம் |
நகுகம் வாராய்-பாண!-பகுவாய் |
||
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில் |
||
தேர் நடைபயிற்றும் தேமொழிப் புதல்வன் |
||
பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடு |
||
5 |
காமர் நெஞ்சம் துரப்ப, யாம் தன் |
|
முயங்கல் விருப்பொடு குறுகினேமாக, |
||
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல் |
||
நாறு இருங் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து, |
||
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, |
||
10 |
'யாரையோ?' என்று இகந்து நின்றதுவே! | உரை |
புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற்கு உரைத்தது.-மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
|