முகப்பு |
நகைஆகின்றே |
245. நெய்தல் |
நகையாகின்றே-தோழி!-'தகைய |
||
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை |
||
மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇ, |
||
துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி, |
||
5 |
ஒழுகு நுண் நுசுப்பின், அகன்ற அல்குல், |
|
தெளி தீம் கிளவி! யாரையோ, என் |
||
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ?' என, |
||
பூண் மலி நெடுந் தேர்ப் புரவி தாங்கி, |
||
தான் நம் அணங்குதல் அறியான், நம்மின் |
||
10 |
தான் அணங்குற்றமை கூறி, கானல் |
|
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி, |
||
பெருங் கடற் சேர்ப்பன் தொழுது நின்றதுவே | உரை | |
குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது.-அல்லங்கீரனார்
|