முகப்பு |
நகை நன்கு |
150. மருதம் |
நகை நன்கு உடையன்-பாண!-நும் பெருமகன்: |
||
'மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி, |
||
அரண் பல கடந்த முரண் கொள் தானை |
||
வழுதி, வாழிய பல! எனத் தொழுது, ஈண்டு |
||
5 |
மன் எயில் உடையோர் போல, அஃது யாம் |
|
என்னதும் பரியலோ இலம்' எனத் தண் நடைக் |
||
கலி மா கடைஇ வந்து, எம் சேரித் |
||
தாரும் கண்ணியும் காட்டி, ஒருமைய |
||
நெஞ்சம் கொண்டமை விடுமோ? அஞ்ச, |
||
10 |
கண்ணுடைச் சிறு கோல் பற்றிக் |
|
கதம் பெரிது உடையள், யாய்; அழுங்கலோ இலளே. | உரை | |
தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை தலைவனை நெருங்கிப் பாணற்கு உரைத்தது.-கடுவன் இளமள்ளனார்
|