முகப்பு |
நயன் இன்மையின் |
75. குறிஞ்சி |
நயன் இன்மையின், பயன் இது என்னாது, |
||
பூம் பொறிப் பொலிந்த, அழல் உமிழ் அகன் பை, |
||
பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இது |
||
தகாஅது-வாழியோ, குறுமகள்!-நகாஅது |
||
5 |
உரைமதி; உடையும் என் உள்ளம்-சாரல் |
|
கொடு விற் கானவன் கோட்டுமா தொலைச்சிப் |
||
பச்சூன் பெய்த பகழி போல, |
||
சேயரி பரந்த மா இதழ் மழைக் கண் |
||
உறாஅ நோக்கம் உற்ற என் |
||
10 |
பைதல் நெஞ்சம் உய்யுமாறே. | உரை |
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தோழி கேட்பச்சொல்லியது.-மாமூலனார்
|