முகப்பு |
நல் நுதல் பசப்பினும் |
151. குறிஞ்சி |
நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும், |
||
கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச் |
||
செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை |
||
கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல் |
||
5 |
வாரற்கதில்ல-தோழி!-கடுவன், |
|
முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி, |
||
கறி வளர் அடுக்கத்து, களவினில் புணர்ந்த |
||
செம் முக மந்தி செய்குறி, கருங் கால் |
||
பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர், |
||
10 |
குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து, தன் |
|
புன் தலைப் பாறு மயிர் திருத்தும் |
||
குன்ற நாடன் இரவினானே! | உரை | |
இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.-இளநாகனார்
|