முகப்பு |
நாடல் சான்றோர் |
327. நெய்தல் |
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின், |
||
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச் |
||
சாதலும் இனிதே-காதல்அம் தோழி!- |
||
அந் நிலை அல்லஆயினும், 'சான்றோர் |
||
5 |
கடன் நிலை குன்றலும் இலர்' என்று, உடன் அமர்ந்து, |
|
உலகம் கூறுவது உண்டு என, நிலைஇய |
||
தாயம் ஆகலும் உரித்தே-போது அவிழ் |
||
புன்னை ஓங்கிய கானற் |
||
தண்ணம் துறைவன் சாயல் மார்பே. | உரை | |
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாய தலைமகள் வன்புறை எதிர் அழிந் தது.-அம்மூவனார்
|