முகப்பு |
நாள் மழை தலைஇய |
17. குறிஞ்சி |
நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து, |
||
மால் கடல் திரையின் இழிதரும் அருவி |
||
அகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி, |
||
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு |
||
5 |
ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை, |
|
'எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு உண்கு' என, |
||
மெல்லிய இனிய கூறலின், வல் விரைந்து, |
||
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து, |
||
உரைத்தல் உய்ந்தனனே-தோழி!-சாரல், |
||
10 |
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி |
|
தீம் தொடை நரம்பின் இமிரும் |
||
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே. | உரை | |
முன்னிலைப்புறமொழியாகத் தலைமகள் தோழிக்குச்சொல்லியது.-நொச்சிநியமங்கிழார்
|