முகப்பு |
நிலம் தாழ் மருங்கின் |
356. குறிஞ்சி |
நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த |
||
விலங்கு மென் தூவிச் செங் கால் அன்னம், |
||
பொன் படு நெடுங் கோட்டு இமயத்து உச்சி |
||
வான் அரமகளிர்க்கு மேவல் ஆகும் |
||
5 |
வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும் |
|
அசைவு இல் நோன் பறை போல, செல வர |
||
வருந்தினை-வாழி, என் உள்ளம்!-ஒரு நாள் |
||
காதலி உழையளாக, |
||
குணக்குத் தோன்று வெள்ளியின், எமக்குமார் வருமே? | உரை | |
வரைவு மறுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- பரணர்
|