முகப்பு |
நிலவே நீல் நிற |
348. நெய்தல் |
நிலவே, நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி, |
||
பால் மலி கடலின், பரந்து பட்டன்றே; |
||
ஊரே, ஒலி வரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி, |
||
கலி கெழு மறுகின், விழவு அயரும்மே; |
||
5 |
கானே, பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும் |
|
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே; |
||
யானே, புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு |
||
கனை இருங் கங்குலும் கண்படை இலெனே: |
||
அதனால், என்னொடு பொரும்கொல், இவ் உலகம்? |
||
10 |
உலகமொடு பொரும்கொல், என் அவலம் உறு நெஞ்சே? | உரை |
வேட்கை பெருகத் தாங்கலளாய், ஆற்றாமை மீதூர்கின்றாள் சொல்லியது.-வெள்ளி வீதியார்
|