முகப்பு |
நின்ற வேனில் |
29. பாலை |
நின்ற வேனில் உலந்த காந்தள் |
||
அழல் அவிர் நீள் இடை, நிழலிடம் பெறாஅது, |
||
ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென, |
||
மான்ற மாலை, வழங்குநர்ச் செகீஇய, |
||
5 |
புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறு நெறி |
|
யாங்கு வல்லுநள்கொல்தானே-யான், 'தன் |
||
வனைந்து ஏந்து இள முலை நோவகொல்!' என |
||
நினைந்து, கைந்நெகிழ்ந்த அனைத்தற்குத் தான் தன் |
||
பேர் அமர் மழைக் கண் ஈரிய கலுழ, |
||
10 |
வெய்ய உயிர்க்கும் சாயல், |
|
மை ஈர் ஓதி, பெரு மடத்தகையே? | உரை | |
மகள்போக்கிய தாய்சொல்லியது.- பூதனார்
|