நின்ற வேனில்

29. பாலை
நின்ற வேனில் உலந்த காந்தள்
அழல் அவிர் நீள் இடை, நிழலிடம் பெறாஅது,
ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென,
மான்ற மாலை, வழங்குநர்ச் செகீஇய,
5
புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறு நெறி
யாங்கு வல்லுநள்கொல்தானே-யான், 'தன்
வனைந்து ஏந்து இள முலை நோவகொல்!' என
நினைந்து, கைந்நெகிழ்ந்த அனைத்தற்குத் தான் தன்
பேர் அமர் மழைக் கண் ஈரிய கலுழ,
10
வெய்ய உயிர்க்கும் சாயல்,
மை ஈர் ஓதி, பெரு மடத்தகையே?

மகள்போக்கிய தாய்சொல்லியது.- பூதனார்