முகப்பு |
நினைத்தலும் நினைதிரோ |
318. பாலை |
நினைத்தலும் நினைதிரோ-ஐய! அன்று நாம் |
||
பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்த |
||
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக, |
||
நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி, |
||
5 |
ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை |
|
பொறி படு தடக்கை சுருக்கி, பிறிது ஓர் |
||
ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து, |
||
என்றூழ் விடர் அகம் சிலம்ப, |
||
புன் தலை மடப் பிடி புலம்பிய குரலே? | உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகனைத் தோழி சொல்லியது.- பாலை பாடிய பெருங் கடுங்கோ
|