முகப்பு |
நீயே, பாடல் சான்ற |
256. பாலை |
நீயே, பாடல் சான்ற பழி தபு சீறடி, |
||
அல்கு பெரு நலத்து, அமர்த்த கண்ணை; |
||
காடே, நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த, |
||
புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே; |
||
5 |
இந் நிலை தவிர்ந்தனம் செலவே: வைந் நுதிக் |
|
களவுடன் கமழ, பிடவுத் தளை அவிழ, |
||
கார் பெயல் செய்த காமர் காலை, |
||
மடப் பிணை தழீஇய மா எருத்து இரலை |
||
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த |
||
10 |
கண் கவர் வரி நிழல் வதியும் |
|
தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவே. | உரை | |
'பொருள்வயிற் பிரிந்தான்' என்று ஆற்றாளாகிய தலைமகளைத் தலைமகன் ஆற்றியது. -பாலை பாடிய பெருங்கடுங்கோ
|