முகப்பு |
நீர் அற வறந்த |
99. முல்லை |
'நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை, |
||
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின், |
||
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர் |
||
தாம் வரத் தெளித்த பருவம் காண்வர |
||
5 |
இதுவோ?' என்றிசின்-மடந்தை!-மதி இன்று, |
|
மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழை |
||
பொறுத்தல்செல்லாது இறுத்த வண் பெயல் |
||
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல- |
||
பிடவமும், கொன்றையும் கோடலும்- |
||
10 |
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே. | உரை |
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது.-இளந்திரையனார்
|