முகப்பு |
நீர் பெயர்ந்து |
291. நெய்தல் |
நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல் |
||
நெய்த் தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு |
||
குப்பை வெண் மணல் ஏறி, அரைசர் |
||
ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும், |
||
5 |
தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு, நீயும், |
|
கண்டாங்கு உரையாய்; கொண்மோ-பாண!- |
||
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து, |
||
எல்லித் தரீஇய இன நிரைப் |
||
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே? | உரை | |
வாயிலாகப் புக்க பாணற்குத் தோழி தலைமகளது குறிப்பு அறிந்து, நெருங்கிச் சொல்லி யது.- கபிலர்
|