முகப்பு |
நெடுங் கடல் |
175. நெய்தல் |
நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர் |
||
கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ, |
||
மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய |
||
சிறு தீ விளக்கில் துஞ்சும், நறு மலர்ப் |
||
5 |
புன்னை ஓங்கிய, துறைவனொடு அன்னை |
|
தான் அறிந்தன்றோ இலளே; பானாள் |
||
சேரிஅம் பெண்டிர் சிறு சொல் நம்பி, |
||
சுடுவான் போல நோக்கும், |
||
அடு பால் அன்ன என் பசலை மெய்யே. | உரை | |
தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.
|