முகப்பு |
நெடுந் தண் ஆரத்து |
292. குறிஞ்சி |
நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த |
||
பசுங் கேழ் இலைய நறுங் கொடித் தமாலம் |
||
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும், |
||
யாணர் வைப்பின், கானம் என்னாய்; |
||
5 |
களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை |
|
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும் |
||
கருங் கற் கான்யாற்று அருஞ் சுழி வழங்கும் |
||
கராஅம் பேணாய்; இரவரின், |
||
வாழேன்-ஐய!-மை கூர் பனியே! | உரை | |
இரவுக்குறி மறுத்தது.- நல்வேட்டனார்
|