முகப்பு |
நெறி இருங் கதுப்பும் |
387. பாலை |
நெறி இருங் கதுப்பும், நீண்ட தோளும், |
||
அம்ம! நாளும் தொல் நலம் சிதைய, |
||
ஒல்லாச் செந் தொடை ஒரீஇய கண்ணிக் |
||
கல்லா மழவர் வில்லிடை விலங்கிய |
||
5 |
துன் அருங் கவலை அருஞ் சுரம் இறந்தோர் |
|
வருவர் வாழி-தோழி!-செரு இறந்து |
||
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த |
||
வேல் கெழு தானைச் செழியன் பாசறை |
||
உறை கழி வாளின் மின்னி, உதுக்காண், |
||
10 |
நெடும் பெருங் குன்றம் முற்றி, |
|
கடும் பெயல் பொழியும், கலி கெழு வானே. | உரை | |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறீஇயது.- பொதும்பில் கிழார் மகனார்
|