முகப்பு |
நொச்சி மா அரும்பு |
267. நெய்தல் |
'நொச்சி மா அரும்பு அன்ன கண்ண |
||
எக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி, |
||
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் |
||
உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல் |
||
5 |
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன்- |
|
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல், |
||
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து' என, |
||
வாரேன்மன் யான், வந்தனென் தெய்ய; |
||
சிறு நா ஒண் மணித் தெள் இசை கடுப்ப, |
||
10 |
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல், |
|
'இவை மகன்' என்னா அளவை, |
||
வய மான் தோன்றல் வந்து நின்றனனே. | உரை | |
தோழி காப்புக் கைமிக்குக் காமம் பெருகிய காலத்துச் சிறைப்புறமாகச் சொல்லியது;வரைவு கடாயதூஉம் ஆம்.-கபிலர்
|