முகப்பு |
நோகோ யானே நோம் என் |
312. பாலை |
நோகோ யானே, நோம் என் நெஞ்சே- |
||
'பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட, |
||
சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு, |
||
பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள, |
||
5 |
மாரி நின்ற, மையல் அற்சிரம்- |
|
யாம் தன் உழையம் ஆகவும், தானே, |
||
எதிர்த்த தித்தி முற்றா முலையள், |
||
கோடைத் திங்களும் பனிப்போள்- |
||
வாடைப் பெரும் பனிக்கு என்னள்கொல்?' எனவே. | உரை | |
பொருள் வலித்த தலைமகன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது.-கழார்க் கீரன் எயிற்றியார்
|