முகப்பு |
நோய் அலைக் கலங்கிய |
94. நெய்தல் |
நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில், |
||
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்; |
||
யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி- |
||
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ |
||
5 |
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப் |
|
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன் |
||
என்ன மகன்கொல்-தோழி!-தன்வயின் |
||
ஆர்வம் உடையர் ஆகி, |
||
மார்பு அணங்குறுநரை அறியாதோனே! | உரை | |
தலைமகன்சிறைப்புறமாக, தலைவி, தோழிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-இளந்திரையனார்
|