முகப்பு |
பகல் எரி சுடரின் |
128. குறிஞ்சி |
'பகல் எரி சுடரின் மேனி சாயவும், |
||
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் |
||
எனக்கு நீ உரையாயாயினை; நினக்கு யான் |
||
உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின், |
||
5 |
அது கண்டிசினால் யானே' என்று, நனி |
|
அழுதல் ஆன்றிசின்-ஆயிழை!-ஒலி குரல் |
||
ஏனல் காவலினிடை உற்று ஒருவன், |
||
கண்ணியன், கழலன், தாரன், தண்ணெனச் |
||
சிறு புறம் கவையினனாக, அதற்கொண்டு |
||
10 |
அஃதே நினைந்த நெஞ்சமொடு |
|
இஃது ஆகின்று, யான் உற்ற நோயே. | உரை | |
குறை நேர்ந்த தோழி தலைவி குறை நயப்பக் கூறியது. தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றதூஉம் ஆம்.- நற்சேந்தனாா
|