முகப்பு |
பருவரல் நெஞ்சமொடு |
18. பாலை |
பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல |
||
வருவர் வாழி-தோழி!-மூவன் |
||
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின், |
||
கானல்அம் தொண்டிப் பொருநன், வென் வேல் |
||
5 |
தெறல் அருந் தானைப் பொறையன், பாசறை, |
|
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர் |
||
திரை தபு கடலின் இனிது கண் படுப்ப, |
||
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத் |
||
தடாஅ நிலை ஒரு கோட்டன்ன, |
||
10 |
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே. | உரை |
பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.-பொய்கையார்
|