முகப்பு |
பல் கதிர் மண்டிலம் |
69. முல்லை |
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி, |
||
சேய் உயர் பெரு வரைச் சென்று, அவண் மறைய, |
||
பறவை பார்ப்புவயின் அடைய, புறவில் |
||
மா எருத்து இரலை மடப் பிணை தழுவ, |
||
5 |
முல்லை முகை வாய் திறப்ப, பல் வயின் |
|
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ, |
||
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி, |
||
கொடுங் கோல் கோவலர் குழலோடு ஒன்றி, |
||
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை, |
||
10 |
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் |
|
இனையவாகித் தோன்றின், |
||
வினை வலித்து அமைதல் ஆற்றலர்மன்னே! | உரை | |
வினைவயிற் பிரிதல்ஆற்றாளாய தலைவி சொல்லியது.-சேகம்பூதனார்
|