முகப்பு |
பழனப் பாகல் |
180. மருதம் |
பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை |
||
கழனி நாரை உரைத்தலின், செந்நெல் |
||
விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன் |
||
பலர்ப் பெறல் நசைஇ, நம் இல் வாரலனே; |
||
5 |
மாயோள், நலத்தை நம்பி விடல் ஒல்லாளே |
|
அன்னியும் பெரியன்; அவனினும் விழுமிய |
||
இரு பெரு வேந்தர், பொரு களத்து ஒழித்த |
||
புன்னை விழுமம் போல, |
||
என்னொடு கழியும்-இவ் இருவரது இகலே. | உரை | |
தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது.
|