முகப்பு |
பாம்பு அளைச் செறிய |
264. பாலை |
பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு, |
||
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை, |
||
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும் |
||
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின் |
||
5 |
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர |
|
ஏகுதி-மடந்தை!-எல்லின்று பொழுதே: |
||
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த |
||
ஆ பூண் தெண் மணி இயம்பும், |
||
ஈகாண் தோன்றும், எம் சிறு நல் ஊரே. | உரை | |
உடன் போகாநின்ற தலைமகன், தலைமகளை வற்புறீஇயது; உடன்போய் மறுத்தரா நின்றான் ஊர்காட்டி, வற்புறீஇயதும் ஆம்.-ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்
|