முகப்பு |
பார்வை வேட்டுவன் |
212. பாலை |
பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ, |
||
நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தெள் விளி |
||
சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும் |
||
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண் |
||
5 |
கடுங் குரற் பம்பைக் கத நாய் வடுகர் |
|
நெடும் பெருங் குன்றம் நீந்தி, நம் வயின் |
||
வந்தனர்; வாழி-தோழி!-கையதை |
||
செம் பொன் கழல்தொடி நோக்கி, மா மகன் |
||
கவவுக் கொள் இன் குரல் கேட்டொறும், |
||
10 |
அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே. | உரை |
பொருள் முடித்துத் தலைமகனோடு வந்த வாயில்கள்வாய் வரவு கேட்ட தோழி தலை மகட்குச் சொல்லியது.-குடவாயிற் கீரத்தனார்
|