முகப்பு |
பிரசம் கலந்த வெண் |
110. பாலை |
பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால் |
||
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்தி, |
||
புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல், |
||
'உண்' என்று ஓக்குபு பிழைப்ப, தெண் நீர் |
||
5 |
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று, |
|
அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர் |
||
பரி மெலிந்து ஒழிய, பந்தர் ஓடி, |
||
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி |
||
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்? |
||
10 |
கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென, |
|
கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள், |
||
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல, |
||
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே! | உரை | |
மனைமருட்சி; மகள்நிலை உரைத்ததூஉம் ஆம்.-போதனார்
|