முகப்பு |
பிறை வனப்பு |
263. நெய்தல் |
பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின் |
||
இறை வரை நில்லா வளையும், மறையாது |
||
ஊர் அலர் தூற்றும் கௌவையும், நாண் விட்டு |
||
உரை அவற்கு உரையாம்ஆயினும், இரை வேட்டு, |
||
5 |
கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது, |
|
கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு, |
||
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும் |
||
மெல்லம் புலம்பற் கண்டு, நிலைசெல்லாக் |
||
கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு, |
||
10 |
உரைத்த-தோழி!-உண்கண் நீரே. | உரை |
சிறைப்புறமாகத் தோழி தலைமகனை வரைவு கடாயது.-இளவெயினனார்
|