முகப்பு |
புணரின் புணராது |
16. பாலை |
புணரின் புணராது பொருளே; பொருள்வயிற் |
||
பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச் |
||
செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்கு |
||
உரியை-வாழி, என் நெஞ்சே!-பொருளே, |
||
5 |
வாடாப் பூவின் பொய்கை நாப்பண் |
|
ஓடு மீன் வழியின் கெடுவ; யானே, |
||
விழுநீர் வியலகம் தூணிஆக |
||
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும், |
||
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண் |
||
10 |
அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்; |
|
எனைய ஆகுக! வாழிய பொருளே! | உரை | |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை நெருங்கித் தலைவன் செலவு அழுங்கியது.-சிறைக்குடி ஆந்தையார்
|