முகப்பு |
புலி பொரச் சிவந்த |
202. பாலை |
புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு |
||
ஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து, |
||
வன் சுவல் பராரை முருக்கி, கன்றொடு |
||
மடப் பிடி தழீஇய தடக் கை வேழம், |
||
5 |
தேன் செய் பெருங் கிளை இரிய, வேங்கைப் |
|
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும் |
||
மா மலை விடரகம் கவைஇ, காண்வர, |
||
கண்டிசின்-வாழியோ, குறுமகள்!-நுந்தை, |
||
அறுமீன் பயந்த அறம் செய் திங்கள் |
||
10 |
செல் சுடர் நெடுங் கொடி போல, |
|
பல் பூங் கோங்கம் அணிந்த காடே. | உரை | |
உடன் போகாநின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது.-பாலை பாடிய பெருங் கடுங்கோ
|