முகப்பு |
புறம் தாழ்பு இருண்ட |
284. பாலை |
'புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின் |
||
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண், |
||
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்', நெஞ்சம், |
||
'செல்லல் தீர்கம்; செல்வாம்' என்னும்: |
||
5 |
'செய்வினை முடியாது எவ்வம் செய்தல் |
|
எய்யாமையோடு இளிவு தலைத்தரும்' என, |
||
உறுதி தூக்காத் தூங்கி, அறிவே, |
||
'சிறிது நனி விரையல்' என்னும்: ஆயிடை, |
||
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய |
||
10 |
தேய்புரிப் பழங் கயிறு போல, |
|
வீவதுகொல் என் வருந்திய உடம்பே? | உரை | |
பொருள் முடியாநின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது.- தேய்புரிப் பழங்கயிற்றினார்
|