முகப்பு |
புன் தலை மந்திக் |
379. குறிஞ்சி |
புன் தலை மந்தி கல்லா வன் பறழ் |
||
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது, |
||
எரி அகைந்தன்ன வீ ததை இணர |
||
வேங்கைஅம் படு சினைப் பொருந்தி, கைய |
||
5 |
தேம் பெய் தீம் பால் வௌவலின், கொடிச்சி |
|
எழுது எழில் சிதைய அழுத கண்ணே, |
||
தேர் வண் சோழர் குடந்தைவாயில் |
||
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த, |
||
பெயல் உறு நீலம் போன்றன விரலே, |
||
10 |
பாஅய் அவ் வயிறு அலைத்தலின், ஆனாது, |
|
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில் |
||
ஓங்கு இருஞ் சிலம்பில் பூத்த |
||
காந்தள்அம் கொழு முகை போன்றன, சிவந்தே. | உரை | |
தோழி தலைமகற்குத் தலைமகளை மடமை கூறியது; காப்புக் கைம்மிக்க காலத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்.-குடவாயிற் கீரத்தனார்
|