முகப்பு |
பூம் பொறி உழுவை |
104. குறிஞ்சி |
பூம் பொறி உழுவைப் பேழ் வாய்ஏற்றை |
||
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே, |
||
துறுகல் மீமிசை, உறுகண் அஞ்சாக் |
||
குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த |
||
5 |
தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது |
|
பைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும் |
||
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும் |
||
யானே அன்றியும் உளர்கொல்-பானாள், |
||
பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர, |
||
10 |
உருமு சிவந்து எறியும் பொழுதொடு, பெரு நீர் |
|
போக்கு அற விலங்கிய சாரல், |
||
நோக்கு அருஞ் சிறு நெறி நினையுமோரே? | உரை | |
தலைவி ஆறுபார்த்து உற்ற அச்சத்தால் சொல்லியது.-பேரி சாத்தனார்
|