முகப்பு |
பெய்யாது வைகிய |
11. நெய்தல் |
பெய்யாது வைகிய கோதை போல |
||
மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப; |
||
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் |
||
வாரார் என்னும் புலவி உட்கொளல் |
||
5 |
ஒழிகமாள நின் நெஞ்சத்தானே; |
|
புணரி பொருத பூ மணல் அடைகரை, |
||
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி, |
||
வலவன் வள்பு ஆய்ந்து ஊர, |
||
நிலவு விரிந்தன்றால் கானலானே. | உரை | |
காப்பு மிகுதிக்கண்இடையீடுபட்டு ஆற்றாளாய தலைமகட்கு, தலைமகன்சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.- உலோச்சனார்
|