முகப்பு |
பெருங் களிறு.... தாக்கலின் |
144. குறிஞ்சி |
பெருங் களிறு உழுவை தாக்கலின், இரும் பிடி |
||
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு, |
||
போது ஏர் உண் கண் கலுழவும், ஏதில் |
||
பேதை நெஞ்சம் கவலை கவற்ற |
||
5 |
ஈங்கு ஆகின்றால்-தோழி!-பகுவாய்ப் |
|
பிணவுப் புலி வழங்கும் அணங்கு அருங் கவலை, |
||
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான் யாற்றுக் |
||
கரை அருங் குட்டம் தமியர் நீந்தி, |
||
விரவு மலர் பொறித்த தோளர் |
||
10 |
இரவின் வருதல் அறியாதேற்கே. | உரை |
ஆற்றது ஏதத்திற்குக்கவன்று சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது.-கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
|