முகப்பு |
பெரும் புனம் |
368. குறிஞ்சி |
பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி, |
||
கருங் கால் வேங்கை ஊசல் தூங்கி, |
||
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து, நும்மொடு |
||
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ? |
||
5 |
நெறி படு கூழைக் கார் முதிர்பு இருந்த |
|
வெறி கமழ் கொண்ட நாற்றமும், சிறிய |
||
பசலை பாய்தரு நுதலும், நோக்கி, |
||
வறிது உகு நெஞ்சினள், பிறிது ஒன்று சுட்டி, |
||
வெய்ய உயிர்த்தனள் யாயே- |
||
10 |
ஐய!-அஞ்சினம், அளியம் யாமே! | உரை |
தோழி, தலைமகற்குச் செறிப்பு அறிவுறீஇயது.- கபிலர்
|