முகப்பு |
பேர் ஊர் துஞ்சும் |
132. நெய்தல் |
பேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை; |
||
திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று, ஒய்யெனப் |
||
பெருந் தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி |
||
போர் அமை கதவப் புரை தொறும் தூவ, |
||
5 |
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல் நகர்ப் |
|
பயில்படை நிவந்த பல் பூஞ் சேக்கை |
||
அயலும் மாண் சிறையதுவே; அதன்தலை, |
||
'காப்புடை வாயில் போற்று, ஓ' என்னும் |
||
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி |
||
10 |
ஒன்று எறி பாணியின் இரட்டும்; |
|
இன்றுகொல், அளியேன் பொன்றும் நாளே? | உரை | |
காப்பு மிகுதிக்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது.
|