முகப்பு |
பேணுப பேணார் |
72. நெய்தல் |
'பேணுப பேணார் பெரியோர்' என்பது |
||
நாணு தக்கன்று அது காணுங்காலை; |
||
உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின் |
||
நினக்கு யான் மறைத்தல் யாவது? மிகப் பெரிது |
||
5 |
அழிதக்கன்றால் தானே; கொண்கன், |
|
'யான் யாய் அஞ்சுவல்' எனினும், தான் எற் |
||
பிரிதல் சூழான்மன்னே; இனியே |
||
கானல் ஆயம் அறியினும், 'ஆனாது, |
||
அலர் வந்தன்றுகொல்?' என்னும்; அதனால், |
||
10 |
'புலர்வதுகொல், அவன் நட்பு!' எனா |
|
அஞ்சுவல்-தோழி!-என் நெஞ்சத்தானே! | உரை | |
தோழி சிறைப்புறமாகத் தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-இளம்போதியார்
|