முகப்பு |
பைங் கண் யானை |
41. பாலை |
பைங் கண் யானைப் பரூஉத் தாள்உதைத்த |
||
வெண் புறக் களரி விடு நீறு ஆடி, |
||
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப் |
||
பாஅர் மலி சிறு கூவலின் தணியும் |
||
5 |
நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ- |
|
எல்லி வந்த நல் இசை விருந்திற்கு, |
||
கிளர் இழை அரிவை! நெய் துழந்து அட்ட |
||
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி, |
||
சிறு நுண் பல் வியர் பொறித்த |
||
10 |
குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே. | உரை |
பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகியல்கூறி வற்புறுத்தியது.-இளந்தேவனார்
|