முகப்பு |
பைம் புறப் புறவின் |
384. பாலை |
பைம் புறப் புறவின் செங் காற் சேவல் |
||
களரி ஓங்கிய கவை முடக் கள்ளி |
||
முளரி அம் குடம்பை ஈன்று, இளைப்பட்ட |
||
உயவு நடைப் பேடை உணீஇய, மன்னர் |
||
5 |
முனை கவர் முது பாழ் உகு நெற் பெறூஉம் |
|
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை, மலர்ந்த |
||
நல் நாள் வேங்கைப் பொன் மருள் புதுப் பூப் |
||
பரந்தன நடக்க, யாம் கண்டனம் மாதோ: |
||
காண் இனி வாழி-என் நெஞ்சே!-நாண் விட்டு |
||
10 |
அருந் துயர் உழந்த காலை |
|
மருந்து எனப்படூஉம் மடவோளையே. | உரை | |
உடன் போகாநின்றான் மலிந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ
|