முகப்பு |
பொங்கு திரை பொருத |
35. நெய்தல் |
பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப் |
||
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி |
||
கிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப் |
||
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து, |
||
5 |
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் |
|
இரை தேர் நாரை எய்தி விடுக்கும் |
||
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம் |
||
பண்டும் இற்றே; கண்டிசின்தெய்ய; |
||
உழையின் போகாது அளிப்பினும், சிறிய |
||
10 |
ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ?-மகிழ்ந்தோர் |
|
கள்களி செருக்கத்து அன்ன |
||
காமம்கொல்?-இவள் கண் பசந்ததுவே! | உரை | |
மண மனைப்பிற்றைஞான்று புக்க தோழி, 'நன்கு ஆற்றுவித்தாய்' என்ற தலைமகற்குச் சொல்லியது.-அம்மூவனார்
|