முகப்பு |
பொரு இல் ஆயமோடு |
44. குறிஞ்சி |
பொரு இல் ஆயமோடு அருவி ஆடி, |
||
நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண் |
||
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி, |
||
மனைவயின் பெயர்ந்த காலை, நினைஇய |
||
5 |
நினக்கோ அறியுநள்-நெஞ்சே! புனத்த |
|
நீடு இலை விளை தினைக் கொடுங் கால் நிமிரக் |
||
கொழுங் குரல் கோடல் கண்ணி, செழும் பல, |
||
பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில், |
||
குடக் காய் ஆசினிப் படப்பை நீடிய |
||
10 |
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து, |
|
செல் மழை இயக்கம் காணும் |
||
நல் மலை நாடன் காதல் மகளே? | உரை | |
இற்செறிப்பின்பிற்றைஞான்று தலைமகன் குறியிடத்து வந்து சொல்லியது.-பெருங்கௌசிகனார்
|