முகப்பு |
பொன் செய் வள்ளத்துப் |
297. குறிஞ்சி |
பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப, |
||
நின் ஒளி எறியச் சேவடி ஒதுங்காய்; |
||
பல் மாண் சேக்கைப் பகை கொள நினைஇ, |
||
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை; |
||
5 |
'எவன்கொல்?' என்று நினைக்கலும் நினைத்திலை; |
|
நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே; |
||
சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம் |
||
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன் |
||
மெல்ல வந்து, நல் அகம் பெற்றமை |
||
10 |
மையல் உறுகுவள், அன்னை; |
|
ஐயம் இன்றிக் கடுங் கவவினளே. | உரை | |
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய், தலைமகன் கேட்பச் சொல்லி யது; தோழி தலைமகளை அறத்தொடுநிலை வலிப்பித்ததூஉம் ஆம்.- மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
|