முகப்பு |
பொன்னும் மணியும் |
166. பாலை |
பொன்னும் மணியும் போலும், யாழ நின் |
||
நன்னர் மேனியும் நாறு இருங் கதுப்பும்; |
||
போதும் பணையும் போலும், யாழ நின் |
||
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்: |
||
5 |
இவை காண்தோறும் அகம் மலிந்து, யானும் |
|
அறம் நிலைபெற்றோர் அனையேன்; அதன்தலை, |
||
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்; |
||
வினையும் வேறு புலத்து இலெனே; நினையின், |
||
யாதனின் பிரிகோ?-மடந்தை!- |
||
10 |
காதல் தானும் கடலினும் பெரிதே! | உரை |
செலவுக் குறிப்பினால் வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது.
|